×

பேராவூரணியில் விவசாயிகளுக்கு 5,000 தென்னங்கன்று வழங்கல்

பேராவூரணி, பிப். 1:  பேராவூரணியில் வேளாண்மைத்துறை சார்பில் தென்னை தொகுப்பு திட்டத்தின்கீழ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அலுவலர் ராணி தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு தலைமை வகித்து விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கி பேசியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து அவர்களின் பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவி செய்யப்படுகிறது. தற்போது 5000 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.மாநில கயறு வாரிய தலைவர் நீலகண்டன், அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் பால்பக்கர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு...